BJP Theni District

இன்று தென்காசியில் நடந்த தமிழக பாஜகவின் மாபெரும் பொதுக் கூட்டத்தில், கொட்டும் மழ…

இன்று தென்காசியில் நடந்த தமிழக பாஜகவின் மாபெரும் பொதுக் கூட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களும், பாஜக சகோதர சகோதரிகளும் பெரும் திரளாகக் கூடி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தினர்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் நம் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்துள்ள நலப்பணிகளைப் பற்றிப் பேசினேன்.

பொய்களால் கட்டமைக்கப்பட்ட திமுக, தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் பித்தலாட்டங்கள், துரோகங்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

தமிழகத்திற்கும், தமிழுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, அடுத்த 11 மாதங்கள் தமிழக பாஜக தலைவர்களும் தொண்டர்களும் எழுச்சியுடன் பணியாற்றுவோம்!

பொதுக்கூட்டத்தில், தென்காசி மாவட்டத் தலைவர் திரு ராஜேஷ் ராஜா அவர்கள் தலைமை வகிக்க, தமிழக பாஜகவின் சட்டமன்றத் குழுத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் திருமதி சசிகலா புஷ்பா மாநிலப் பொதுச் செயலாளர்கள் திரு கருப்பு முருகானந்தம், திரு பொன் பாலகணபதி, திரு A.P.முருகாணந்தம் மாநிலச் செயலாளர் திருமதி மீனாதேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.

#BJPTN #அண்ணாமலை







Source

BJP Theni

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed